இதையடுத்து கடந்த வாரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்க வந்த 2 நபர்கள் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணையை கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 25ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்துள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது