அரியலூர் மாவட்டம் குருங்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் தண்ணீர் குடிக்க வந்த சுமார் 7 வயதுடைய புள்ளிமான் ஒன்று எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து அங்கேயே புதைத்தனர்.