குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (12.06.2025) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் தலைமையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கட்டாயப் பணிகளில் ஈடுபடுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுபோன்று ஈடுபடுத்துபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குழந்தைகளை கட்டாயத் தொழிலில் ஈடுபடுத்துபவர் மீது 1098 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.