அரியலூர் மாவட்டத்தில், விவசாயிகள் நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆண்டிமடம் மற்றும் கூவத்தூர் தெற்கு கிராமங்களில் நடைபெற்ற முகாமினை வேளாண் இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி ஆய்வு செய்தார். விவசாயிகள் அடையாள எண் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து அவர் விவசாயிகளுக்கு விளக்கினார்.