பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித் தொகை

ஆந்திர பிரதேசத்தில் கூட்டணி அரசு ஒரு வருடம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, முதல்வர் சந்திரபாபு நாயுடு 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தில் முக்கியமான பகுதியான ‘தல்லிகி வந்தனம்’ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கி கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி