மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை திடீர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், “ ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், சில நாட்களுக்கு முன்பு, கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி