தமிழக பாஜக தலைவராக அக்கட்சியின் உறுப்பினரும் MLA-வுமான நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய தலைவராக இருக்கும் அண்ணாமலையின் பெயர் பலகை மீது மார்கர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை, பெயர்பலகைக்கு அருகே இருக்கும், மற்றொரு பலகையில் இருக்கும் கோடுகள் இதில் பிரதிபலிப்பதால், பெயர் அளிக்கப்பட்டது போன்று தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது.