அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ், இன்றுடன் (ஜூலை 31) பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிண்டிகேட் கூட்டத்தில் வேல்ராஜை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.