நடு ஆற்றில் உயிருக்கு போராடிய முதியவர் பத்திரமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நடு ஆற்றில் செடிகளை பிடித்தவாறு முதியவர் முத்துசாமி என்பவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், கயிறு கட்டி, நடு ஆற்றில் இருந்த முதியவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி