திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை கூட்ட நெரிசலிலும், துறை வாரியான சிறப்பான திட்டமிடல் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 87,689 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படும் மூலவர் ஏழுமலையானின் வரலாற்று சிறப்புமிக்க அபிஷேக சேவையில் 5,850 சாதாரண பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்துள்ளனர்.