கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய, கையாலாகாத விடியா திமுக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், அனைத்து வருவாய் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வரும் 24-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.