சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகாரை மதுரையை சேர்ந்த பேராசிரியை நிகிதா கடந்த ஜூன் மாதம் அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்குமாரை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இன்று (மார்ச் 4) ஆஜரானார்.
நன்றி: NewsTamilTV24x7