அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் நேற்று (மே 25) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த 3 தொகுதிகளும் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதற்கான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்ந்து மொத்தம் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.