அதிமுக கட்சியில் தவறு செய்தவர்கள் தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருவதாக அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், தவெகவில் தனது மகன் பொறுப்பில் இருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
நன்றி:SunNews