ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக செந்தில் முருகன் அதிமுகவில் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி இடைத்தேர்தலில் போட்டியிட்டதால் செந்தில் முருகனை அடிபடை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.