நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில், ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை சிபிஐ சிறப்பு விசாரணைக்குழு கைது செய்துள்ளது. கலப்பட நெய்க்காக அசிட்டிக் ஆசிட் ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை பாமாயில் தயாரிக்க பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி லட்டுவில் கலப்பட நெய் கலந்த விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பூதாகரமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.