இந்திய கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் Photoshop, Acrobat, Firefly AI, Premiere, Adobe illustrator உள்ளிட்ட கிரியேட்டிவ் செயலிகளை இலவசமாக வழங்க இருப்பதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று (பிப்., 19) நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் மாநாட்டில், இந்திய அரசுடன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இலவசமாக பயன்படுத்த முடியும்.