சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு, நாளை (டிச.02) திமுக தலைமையுடன் சந்திப்பு நடத்தவுள்ளது. சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் கூடுதல் தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்