சென்னை கோயம்பேடு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் மற்றும் சிறுமி மீது கார் ஏற்றிய நிலையில் இளம்பெண் கொல்லப்பட்டார். மேலும், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயது சிறுமி இன்று (ஜூன்.03) உயிரிழந்தார். அதிகாலை 2.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நன்றி: பாலிமர்