சிவ பக்தன்.. சிவராத்திரி அன்றே உயிர் நீத்தார்

நடிகர் மயில்சாமியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்பு குறித்து பேசிய நடிகர் சார்லி, மயில்சாமி தீவிர சிவபக்தர், சிவராத்திரியின்போதே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அவரது ஆன்மா நிம்மதி அடையட்டும் என கூறினார். மயில்சாமி இறப்பு குறித்து பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகள் செய்துள்ளார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும் என கூறினார்.