இரும்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த குடிமகன்

மதுரையை சேர்ந்த பொன்ராஜ், சின்னாளப்பட்டியில் வசித்து வரும் உறவினரை பார்க்க சென்றுள்ளார். சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்தில் போதையில் உறவினரிடம் பொன்ராஜ் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது உறவினரிடம் குடிக்க 20 ரூபாய் பணம் கேட்டு கொடுக்காததால், பேருந்து நிலையத்தில் இருந்த சங்கு ஒலிக்கும் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். யார் சொல்லியும் கீழே இறங்காத அவர், பின்னர் போலீசாரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி