தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து மாநிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், "பிறப்பால் அனைவரும் சமம்" என்ற சமத்துவ கோட்பாட்டுடனும், ஊழலற்ற முறையிலும் முதலமைச்சர் விஜய் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், தவெகவின் வெற்றி என்பது தமிழக மக்களின் வெற்றி என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.