வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருக்கு அந்த இளம்பெண் குறுஞ்செய்தி அனுப்பியது அனுஜித்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அனுஜித் அப்பெண்ணின் கணவரிடம் தெரிவித்ததும், கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி அனுஜித் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக, அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கடக்கல் போலீசார் அனுஜித்தை கைது செய்தனர்.