திருட்டை பார்த்த சிறுமியை எரித்துக்கொன்ற 16 வயது சிறுவன்

ஹரியானாவின் குருகிராம் நகரில் செக்டார் 107 பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பம் மிகவும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களில் ஒரு குடும்பத்தில் இருந்த 9 வயது சிறுமி பாதி எறிந்த நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் மூலையில் மறைந்திருந்த மற்றொரு குடும்பத்தில் வசித்துவந்த சிறுவனை பிடித்து விசாரித்ததில் சிறுமியை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டான். மேலும் நடந்த விசாரணையில் சிறுமியின் வீட்டில் நகையை திருடியபோது அதனை சிறுமி பார்த்துவிட்டார், என்னிடம் இருந்து நகையை பறிக்க முயற்சித்தபோது கொலை செய்துவிட்டேன் என சிறுவன் கூறியுள்ளான்.

தொடர்புடைய செய்தி