தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும் வால்மீகி நகர், பெருங்குடி கட்டபொம்மன் தெரு மற்றும் ஏரிக்கரை தெரு ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், கொளத்தூர் வீனஸ் நகர், கணேஷ் நகர், நேர்மை நகர் மற்றும் 200 அடி சாலை ஆகிய இடங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.