ஜப்பான் கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோவின் இவாடாவின் வடக்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூகம்பத்தின் மையம் 10 கி.மீ., ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.