தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மக்கள் மருத்துவர் பொன்னையா (90) இன்று (பிப்., 12) காலமானார். கடந்த 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்த இவர் ரூ.10, ரூ.20, ரூ.50 என குறைந்த செலவில் உரிய மருந்துகளுடன் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
அவரது மரண செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நன்றி: தினகரன்