தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக - அதிமுக தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வழங்கவில்லை. நாதக இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்காது என்பதால் தவெக தலைவர் விஜயின் வாக்குறுதிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். ஆனால், அவரும் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கவில்லை. இதனால், தள்ளுபடியை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அப்செட்டில் உள்ளனர்.