உ.பி: மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வரும் மொஹீனின் உடல் ஒரு கட்டிலில் கட்டப்பட்ட நிலையிலும், அவரது மனைவி அஸ்மா மற்றும் அவர்களது மகள்கள் அப்சா(8), அஜேசா(4), அதிபா(1) ஆகியோர் படுக்கை பெட்டிகளில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.