ஜம்மு காஷ்மீரின் பட்காம் பகுதியில் இன்று அதிகாலை (நவ., 16) டாடா சுமோ காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பாலார் என்ற பகுதிகளில் நடந்த இந்த கோர விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை கைப்பற்றி, அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
நன்றி: ஏஎன்ஐ