வடக்கு ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வடக்கு ஈரானில்  5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) படி, இந்த நிலநடுக்கம் செம்னான் நகருக்கு தென்மேற்கே 37 கிமீ தொலைவில் மையம் கொண்டு 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியை உலுக்கியது என்றும், சுமார் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் தெஹ்ரானிலும் உணரப்பட்டதாகவும் ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி