விஷச் சாராயம் குடித்த 30 பேர் கவலைக்கிடம்

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே 42 பேர் உயிரிழந்தன நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. இந்நிலையில் "கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 50 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி