தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் கேரளம் மாநிலம் விரைந்துள்ளனர். அம்மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அரக்கோணத்தில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டத, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் தலா 30 பேர் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர்.