பிரேமலதா விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அவர், 2018ல் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2023ல் தேமுதிக பொதுச்செயலாளரானார். 2024-25 காலகட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி ஆலோசனைகளில் முக்கிய பங்காற்றினார். 2025ல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றிப் பெற்று, சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்.