தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜுலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜுன் 15ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுகிறது.