சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் சேர்மன் பரிதா நவாப் அதிமுகவில் இணைந்தார். அவருடன் 2000 ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைந்தனர். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திமுக பல முன்னாள் எம்.எல்.ஏக்களை தங்களுடன் சேர்த்ததற்கு எதிரொலியாக, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் திமுகவுக்கு அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்து வருகிறார்.