கேரளாவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 மாணவிகள் பலி

கேரளா மாநிலம் மூணாறு அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில், கனகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணிகா, திங்கள் சந்தையைச் சேர்ந்த ஆதிகா என்ற 2 மாணவிகள் உயிரிழந்தனர். எக்கோ பாய்ண்ட் என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் இருந்து மூணாறுக்கு 45 பேர் சுற்றுலாவுக்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி