அமெரிக்காவிலிருந்து கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், கடந்த ஜனவரி மாதம் முதல் மட்டும் 3,258 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் குடியுரிமை தொடர்பான முக்கிய விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.