உரிமையியல் வழக்குகளில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராக 17 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தவெக அரசு அமைந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 வழக்கறிஞர்களையும், மதுரை அமர்வுக்கு 7 வழக்கறிஞர்களையும் தற்காலிக அடிப்படையில் நியமித்து பொதுத்துறை உத்தரவிட்டுள்ளது. நிரந்தர அரசு வழக்கறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படும்வரை இவர்கள் ஆஜராவார்கள்.