தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 2025-26 ஆம் ஆண்டுக்கு 130 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 110 பேருந்துகள் ஏ.சி. வசதியில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள் இருக்கை வசதி கொண்ட ‘மல்டி ஆக்சில்’ சொகுசுப் பேருந்துகள் ஆகும். 20 மல்டி ஆக்சில் பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்கப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் பயன்பாட்டிற்கு வரும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.