125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

மத்திய அரசின் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150' திட்டம் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும். மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி அளிக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் 100 நாட்கள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி