சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த ஊர்காவல்படை வீரர் சதீஷ்குமார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி: சன்நியூஸ்