1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நேற்று (ஜன., 14) நடைபற்றது . தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 1,000 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 300 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்வு ஜீனியஸ் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.  தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி