கல்வியில் சிறந்து விளங்கும் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென தமிழகம் முழுவதும் 100 உன்னதப் பள்ளிகள் திறக்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம், பாடநூல், சீறுடை ஆகியவை கட்டணமின்றி வழங்கப்படும் இந்த 100 பள்ளிகளில் 50 பள்ளிகள் மாணவிகளுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.