இராஜபாளையம்: நாளை டிச. 7 ஆம் தேதி மின்தடை

62பார்த்தது
இராஜபாளையம் அருகே பராமரிப்பு காரணமாக சத்திரப்பட்டி, சேத்தூர் பகுதிகளில் நாளை டிச. 7 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது - மின் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி துணை மின்நிலையத்தில் டிச. 7 நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கு இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, நயினாபுரம், வடமலையாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இதேபோல் சேத்தூர் துணை மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், புத்தூர், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் டிச. 7 நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி