இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தளவாய்புரம், முகவூர் அருகே உள்ள வங்கியின் முன்பாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில் முகவூரை சேர்ந்த அன்பகழன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்கள் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.