அரக்கோணம் அடுத்த பள்ளூரில் பழமை வாய்ந்த வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பஞ்சமி திதியான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக ஆண்களும், பெண்களும் வாழை இலையில் பச்சரிசி பரப்பி தேங்காய் அல்லது பூசணிக்காய் உடைத்து அதில் நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.