சிவகங்கை மாவட்டம்
காளையார்கோவில் அருகே பெரியகண்ணனூர் கிராமத்தில் கோவில் திரு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி மாடுகள் பங்கேற்றனர் அதில் சின்ன மாட்டு பிரிவில் 28 ஜோடி மாடுகளும். பெரிய மாட்டு பிரிவில் 8 மாட்டு வண்டிகள்
ஜோடிகளும், கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கிலோமீட்டர் தொலைவும், பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். இதில் பெரிய மாட்டு பிரிவில் முதல் இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியதால் மாட்டு வண்டிகள் இறுதி வரை ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டினை காளையார் கோவில், கல்லத்தி , பெரிய கண்ணனூர், முடிக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.