மலைக்குடிப்பட்டியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இலுப்பூர் போலீசார் மலைக்குடிப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கமலேஸ்வரன் என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.