உலக பூமி தினம் இன்று (ஏப்.22) சிறப்பிக்கப்பட்டு வருகிறது. நாம் வாழும் பூமியின் நலனைக் காக்க இன்று உறுதியேற்று உலகுக்கு வலுசேர்க்கும் செயல்களில் இன்று நாம் ஈடுபடவேண்டும். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு லால்குடி நகராட்சியில் உள்ள கருப்பன் குளத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய்மைப் பணியாளர்கள், நகர்மன்ற அதிகாரிகள் புவியைக் காக்க உறுதியும் எடுத்துக்கொண்டனர்.